• June 8, 2025

கோவை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த 2 பேருக்கு சரமாரி வெட்டு; ஒருவர் பலி

 கோவை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த 2 பேருக்கு சரமாரி வெட்டு; ஒருவர் பலி

கோவையில் இன்று பகலில்  குற்றவியல்  வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த 2 பேரை 4 பேர் சேர்ந்து  அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் ஒருவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் பலத்த காயங்களுடன் தப்பினார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவத்துக்கு காரணம் என்ன? கொலைசெய்துவிட்டு தப்பியவர்கள் பெயர் விவரம் எதுவும் தெரியவில்லை.

பழிக்குபழி சம்பவமாக இந்த அரிவாள்  வெட்டு சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த அரிவாள் வெட்டு சம்பவம் பொதுமக்கள் சிலரால் செல்போனில் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதலங்கலில் பரவி வருகிறது. இந்த காட்சிகளை ஆதாரமாக கொண்டு 4 பேரை  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்




Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *