நாய்களை விரட்ட குச்சி எடுத்து வரச்சொன்னவர் குத்திக்கொலை

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அடுத்த உலகம்பட்டியார் தோட்டத்தை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 65). இவர் நேற்று மாலை தனது விவசாய கிணற்றில் துணி அலசி விட்டு திரும்பிய போது அவரது பேரன் அருகே வந்தார்.
அப்போது அருகில் வசிக்கும் செபஸ்டியான் என்பவர் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் ஓடி வந்ததால் அவை கடித்து விடும் என்ற பயத்தில் குச்சி எடுத்து வருமாறு தனது பேரனிடம் கூறினார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த செபஸ்டியான் மகன் வின்சென்ட் அவருடன் வாய்த் தகராறில் ஈடுபட்டார்.
. அப்போது அங்கு வந்த வின்சென்ட்டின் தம்பி டேனியல் (வயது 21 )ராயப்பனை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார்.. இது குறித்த தகவல் அறிந்ததும் திண்டுக்கல் டவுன் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி,தாடிக்கொம்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராயப்பனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்,.
