கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் பொங்கல் விளையாட்டு போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

கோவில்பட்டி அப்பனேரி பஞ்சாயத்து வெங்கடேஸ்வரா கார்டன் பகுதி குடியிருப்போர் நலசங்கம் சார்பில் வழக்கம் போல் . இந்த ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது,
பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன,
அதன்படி ., பொங்கலன்று காலை முதல் மாலை வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன, அதன் விவரம் வருமாறு:-


சிறுவர்கள்(5 முதல் 8 வயது வரை)
திருக்குறள் போட்டி
ஓட்டப்பந்தம்- 50 மீட்டர்
ஸ்லோ சைக்கிள் பந்தயம்-50 மீட்டர்
சிறுமியர்கள்(5 முதல் 8 வயது வரை)
திருக்குறள் போட்டி
லெமன் ஸ்பூன்
வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது
சிறுவர்கள் (9 முதல் 12 வயது வரை)
திருக்குறள் போட்டி- விளக்க உரை
ஓட்டபந்தயம்- 1௦௦ மீட்டர்
ஸ்லோ சைக்கிள் ரேஸ் – 1௦௦ மீட்டர்
சிறுமியர்கள் (9 முதல் 15 வயது வரை)
கோலபோட்டி
பெண்கள்
கோலபோட்டி
கயிறு இழுத்தல்
வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது
லக்கி கார்னர்
லெமன் ஸ்பூன்
ஆண்கள்
கயிறு இழுத்தல்
லக்கி கார்னர்
பானை உடைத்தல்
குடியிருப்போர் ஆர்வம்
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே ஆர்வத்துடன் பதிவு செய்தனர்; கோல போட்டிக்கு வந்தவர்கள் தங்களுக்கு தேவையான கோல பொடியை அவர்களே கொண்டு வந்தனர்,. விழாக்குழுவினரின் விதிமுறைகளை போட்டியாளர்கள் முழுமையாக கடைபிடித்து பங்கேற்றனர்,
போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொண்டனர், போட்டிகளை குடியிருப்போர் அனைவரும் சகோதர பாசத்துடன் கூடி இருந்து ரசித்து உற்சாகப்படுத்தினார்கள்.
பரிசளிப்பு விழா



போட்டிகள் மாலை முடிந்ததும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, பரிசுகளை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற .தாமோதரன்,ரமேஷ், ராஜ்குமார், கற்பூர ராஜ் ஆகியோர் வழங்கினார்கள். விழா முடிந்ததும் அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது,
போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்,

