• June 8, 2025

சாலை பாதுகாப்பு துண்டு பிரசுரம்

 சாலை பாதுகாப்பு துண்டு பிரசுரம்

தமிழக போக்குவரத்து துறையின் சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் நடைபெற்றது.அனைத்து பொதுமக்களுக்கும் சாலையில் பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவதற்கும் பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையில் நடப்பதற்கும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு துண்டு பிரசுரங்களை அம்மன் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மாரிமுத்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்த வர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மன் மாரிமுத்து, ஆஞ்சநேயா டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *