• June 8, 2025

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருவாதிரை திருவிழா  ஆருத்ரா தரிசனம்

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருவாதிரை திருவிழா  ஆருத்ரா தரிசனம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்  உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

இதற்காக அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும் 4 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜா பெருமாளுக்கும் மாணிக்கவாசகர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

பின்னர் காலை 5.30 மணிக்கு கோ பூஜை மகா தீபாராதனை தாண்டவ தீபாராதனை நடந்தது.

இந்த பூஜைகளை காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். காலை 8 மணிக்கு மேல் சிவகாமி அம்பாள் ஆனந்த நடராஜர் பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *