கோவில்பட்டியில் 25 அணிகள் பங்கேற்ற பிரமாண்ட கைப்பந்து போட்டி

கோவில்பட்டி களம் உடற்பயிற்சி மையம் சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான பகல், இரவு கைப்பந்து போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தன,
இளையரசனேந்தல் சாலையில் எல்.பி.எல்.கிட்ஸ் பார்க் எதிர்புறம் உள்ள களம் உடற்பயிற்சி மைய மைதானத்தில் இப்போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் மொத்தம் 25 அணிகள் பங்கேற்றன.
பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை ரசிக்க இருக்கை வசதி செய்யப்பட்டு இருந்தது. போட்டிகள் இரண்டு தடங்களில் நடந்தது. முதல் நாளன்று போட்டியை எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஏ.மகாலட்சுமி தொடங்கி வைத்தார்.
அனைத்து அணிகளும் பிரபலமான அணிகள் என்பதால் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக இருந்தது. ரசிகர்கள் ஆரவாரம் செய்து போட்டியை ரசித்தனர்,
இறுதிப்போட்டியில் கோவில்பட்டி சுபா பிரேம் அணியும், களம் உடற்பயிற்சி மையம் அணியும் களம் இறங்கின. ஆட்டம் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருந்தது,
இறுதியில் சுபா பிரேம் அணியானது களம் உடற்பயிற்சி மைய அணியை தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோற்கடித்து (ஸ்கோர்-25:23, 25:22)சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
தொடர்ந்து 3 மற்றும் 4 வது இடத்துக்கான போட்டியில் ராஜபாளையம் தமிழ்த்தாய் அணியும் வில்லிசேரி அணியும் மோதின,. இதில் ராஜபாளையம் அணி அபாரமாக ஆடி வில்லிசேரி அணியை தோற்கடித்தது.
முதலிடம் பெற்ற கோவில்பட்டி சுபா பிரேம் அணிக்கு ரூ. 10 ஆயிரம் ரொக்கபரிசு மற்றும் கோப்பை பரிசளிக்கப்பட்டது, இரண்டாம் இடம் பெற்ற களம் உடற்பயிற்சி மையம் அணிக்கு ரூ, 8 ஆயிரம் ரொக்க பரிசுடன் கோப்பை வழங்கப்பட்டது,
மூன்றாம் இடம் பெற்ற ராஜபாளையம் தமிழ்த்தாய் அணிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கபரிசுடன் கோப்பையும், நான்காவது இடம் பெற்ற வில்லிசேரி அணிக்கு ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசுடன் கோப்பையும் வழங்கப்பட்டது.

ரொக்க பரிசுகள் அனைத்தும் களம் உடற்பயிற்சி மையத்தின் சார்பில் வழங்கப்பட்டது. கோப்பைகளை மதுரை எம்.எம்.மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி.ஆனந்த் வழங்கினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கைப்பந்து பயிற்சியாளர் எஸ்.மாரி முருகேசன், ஸ்கேட்டிங் பயிற்சியாளார் ஏ.தங்க மாரியப்பன் ஆகியோர் செய்து இருந்தனர்,
