தமிழக நாட்டுப்புற கலைஞர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்: `தமிழர் கலைகளை வாழ வையுங்கள்’-தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன்

தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழர் பண்பாடு மேலோங்க வேண்டும் என்று சொன்னால் அனைத்து தமிழர்களும் தங்கள் இல்லங்களில் நையாண்டி மேளம், பறை ஆட்டம், சிலம்பு ஆட்டம் உட்பட தமிழர் கலைகளை நிகழ்த்த வேண்டும்,

குறிப்பாக கிறிஸ்தவர்கள் மேற்கத்திய பேண்ட் வாத்தியங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர் இவர்கள் இன்று தாண்டியார் ஆட்டம் ஆட ராஜஸ்தான் மேளமான நாசிக் டோல் -யும் பயன்படுத்துகின்றனர்* கேரளா மாநில செண்டை மேளத்தை பயன்படுத்துகின்றனர் ஆனால் இந்த மேளங்கள் இந்துக்கள் தான் அங்கு வாசிக்கிறார்கள், இந்து கோவில்களில் தான் வாசிக்கப்படுகிறது,
ஆனால் தூத்துக்குடியில் மட்டும் கிறிஸ்தவர்கள் விழாக்களில் நிகழ்த்துகிறார்கள், அது எப்படி வேறு மாநிலங்களில் இந்துக்கள் நிகழ்த்தக்கூடிய அந்த வாத்தியங்கள் தூத்துக்குடியில் கிறிஸ்தவர்கள் இல்ல விழாக்களில் திருமண விழாக்களில் அரசியல் விழாக்களில் நிகழ்கிறது, எப்படி ஆனால் நையாண்டி மேளம் முதல் தமிழர் கலைகளை நிகழ்த்துவதற்கு யோசிக்கிறார்கள், காரணம் தமிழர் கலைகள் அனைத்தும் இந்துக்களுக்கு மட்டும் சொந்தம் என்று எண்ணுகிறார்கள்
அது தவறு, நாம் அனைவரும் தமிழர் என்று எண்ண வேண்டும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதை சிந்திக்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழர் கலைகள் மேலோங்கும் சாமிதோப்பு ஐயா இடுப்புக்கு மேல் சட்டை அணிய வேண்டும் என்பதற்காக தோல் சீலை போராட்டம் என்கின்ற மிகப்பெரிய போராட்டத்தை ஏற்படுத்தினார் ஆனால் இன்று இடுப்புக்கு மேல் சட்டை அணியாத கேரளா செண்டை மேள கலைஞர்களை அழைத்து விழா நடத்துவது மிகப் பெரிய தவறு
தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் வைராக்கியம் உள்ள கலைஞர்கள் பலர் தமிழர் கலையைத் தவிர மாற்றுக் கலையை வாசிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்து உண்மை பச்சை தமிழனாய் தொழில் இல்லாமல் வேதனையில் உலர்ந்து கொண்டு இருக்கின்றனர் ஒரு சிலர் வயிற்றுப் பிழைப்பிற்காக செண்டை மேளத்தை அடிக்க ஆரம்பித்து விட்டது அதற்கு யார் காரணம் என்று சொன்னால் தமிழக அரசியல்வாதிகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை உள்ள நபர்கள் மட்டுமே ஏழை மக்கள் காரணம் அல்ல
காரணம் என்னவென்று சொன்னால் கேரளாவில் இருந்து செண்டை மேளம் கொண்டு வர வேண்டும் என்று சொன்னால் ரூ. 50,000 . ரூ.1 லட்சம் என்ற பேரம் பேசப்படுகிறது ஆனால் நையாண்டி மேளம் கலைஞர்கள் வேண்டுமென்றால் ரூபாய் 18000 கொடுத்தால் போதும் வீட்டிற்கு 9 பேர் வருவார்கள் தாரை தப்பட்டை முழங்க வேண்டும் என்று சொன்னால் எட்டாயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் வீட்டுக்கு வருவார்கள்
அதை விடுத்து அதிக பணம் கொடுத்து அழைப்பது யார் பணம் படைத்த வர்கள், பந்தா பண்ணும் அவலம் தொடர்கிறது அவை நிறுத்தப்பட வேண்டும் தமிழர் கலைகள் வாழ வேண்டும் தமிழன் போற்றப்பட வேண்டும் அதுவே எங்கள் கோரிக்கையாகும்
தமிழக நாட்டுப்புற கலைஞர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் அடுத்த தலைமுறையினருக்கு தமிழர் பண்பாடு தமிழர் கலைகள் இவை என்று கூற முடியும் ஆகையால் நண்பர்களே நாம் எந்த சமயத்தை சார்ந்தவராக இருந்தாலும் தமிழர் கலைகளை வாழ வையுங்கள்
இவ்வாறு *தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன் கூறி இருக்கிறார்.
