ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளையின் பொருளாளர் பால சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. . 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராசு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மரக்கன்றுகள் நட்டினார் .
சங்கரலிங்கபுரம் ரோடு,எட்டயாபுரம் ரோடு,கதிரேசன் கோவில் ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.விழாவில் ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சரவணன்,செண்பகராஜ்,செந்தில் குமார்,நல்ல தம்பிமற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.\