• February 7, 2025

திருவண்ணாமலை அருகே வெட்டிக்கொலை: ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான பரிதாபம்

 திருவண்ணாமலை அருகே வெட்டிக்கொலை: ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான பரிதாபம்

திருவண்ணாமலை அருகே செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். விவசாயம் செய்து வந்தார்,. இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), பூமிகா (4)என்ற 4 மகள்களும், தனுஷ் என்ற 4 வயது மகனும் உண்டு.

கணவன்-மனைவி இடையே நீண்டநாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பழனி அரிவாளால் மனைவி உள்ளிட்ட 6 பேரை சரமாரியாக வெட்டினார். 6 பேரும் இறந்துவிட்டதாக கருதிய பழனி தன்னைத்தானே அரிவாளால் வெட்டிக்கொண்டு இறந்து போனார்.

.குடும்பத்தையே கொலை செய்து விட்டு பழனியும் இரண்டு விட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பழனி உள்பட 6 பேரின் உடல்களை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிகா என்ற சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்,

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *