• June 8, 2025

பா.ஜ.க. அரசால், அரசியல் சட்டத்திற்கு ஆபத்து – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

 பா.ஜ.க. அரசால், அரசியல் சட்டத்திற்கு ஆபத்து – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அரசியல் அமைப்புச் சட்டம் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால் அரசியல் சட்டத்தை ஏற்று அதை முறையாக அமலாக்க கூடிய நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சி ஆட்சிக்கு வந்தால் அச்சட்டம் நிலைத்து நிற்கும்

.2014 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசால் அரசியல் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பு அற்றது
. மதச்சார்பின்மை ஜனநாயகம் கூட்டாட்சி சுய சார்பு பொருளாதார கொள்கை இவையெல்லாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள். இதனை பா.ஜ.க. அரசு தகர்த்தெறிந்து வருகிறது

மதச்சார்பற்ற இந்தியாவை மத சார்பு இந்தியாவாக பா.ஜ.க. அரசு மாற்றி வருகிறது. ஜனநாயகத்தை ஒடுக்கி வருகிறது. கூட்டாட்சி கோட்பாட்டை சீர் குழைத்து வருகிறது இம்மாதிரியான சூழலில் அரசியல் அமைப்பு சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும்

. மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க. அரசாங்கம் பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளை சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சியை கவிழ்த்து வருகிறது.
கோவா ,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தது

சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை என்றால் ஆளுநரை வைத்து சீர்குலைக்கிறது. கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள ஆளுநர்கள் போட்டி அரசாங்கம் நடத்திக் கொண்டுள்ளனர். .

எந்த அரசு பொறுப்பேற்றாலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும். மின்சார இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும்,.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *