பொதுமக்கள் புகார்: ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகம் பற்றி பொதுமக்களிடமிருந்து அதிகமான புகார்கள் வந்ததையடுத்து இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா திடீர் ஆய்வு மேற்கொண்டார்..
மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும், மருத்துவ உபகரணங்கள் பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும்
இனிமேல் எந்த விதமான புகார்களும் மருத்துவமனை நிர்வாகம் பற்றி பொதுமக்கள் அளிக்காதவாறு அனைவரும் நடந்து கொள்ளும்படி மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
