• June 8, 2025

கூட்டுறவு வாரவிழா:ரூ.1 கோடி நலத்திடட உதவிகள்

 கூட்டுறவு வாரவிழா:ரூ.1 கோடி நலத்திடட உதவிகள்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமத்தில் தமிழ்நாடு கூட்டுறவு துஒட்டநத்தம்றையின் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை, கூட்டுறவு கடன் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ரூ.1 கோடிக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து புதிய கூட்டுறவு சங்க உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, தூத்துக்குடி மேலாண்மை இயக்குனர் சிவகாமி, கோவில்பட்டி துணை பதிவாளர் பாலகிருஷ்ணன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் தமிழ்ச்செல்வன், அக்னிமுத்துராஜ், பாலமுருகன், கூட்டுறவு பொது வினியோக திட்ட சார்பதிவாளர் செல்வகுமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் கென்னடி, மனோகர் தம்பிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி பயிற்றுனர் அதிசயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *