கோவில்பட்டி ரெயில்நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் ; மத்திய ரெயில்வே மந்திரியிடம் கடம்பூர் ராஜூ கோரிக்கை

முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ டெல்லியில் மத்திய|ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது :-
கோவில்பட்டி மற்றும் கடம்பூர் ரெயில்வே நிலையத்தில் சில ரெயில்கள் நிற்காமல் செல்லும் நிலை உள்ளதால் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் 2வது நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும், மின்தூக்கி மற்றும் எக்ஸ்லேட்டர் அமைக்க வேண்டும்
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பேட்டரி கார் வழங்க வேண்டும்
கோவில்பட்டி லெட்சுமி மில் முதல் இளையரசனேந்தல் சுரங்கபாதை வரை ரெயில்வே பாதைக்கு இணையாக புதிய சர்வீஸ் சாலை மற்றும் சுரங்கபாதை நடைபாதை அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறபட்டு இருந்தது.
மனுவினை பெற்றுக்கொண்ட மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
