“கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது”- நீதிபதிகள் வேதனை

தமிழகத்தில் 2019 – 2020ம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற கோரிய வழக்கில் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது .விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இயல்-இசை-நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
2021ம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்ற தலைவர் பதிலளிக்கவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
