எங்களின் வலிமை தி.மு.க.வுக்கு தெரியும்- டி.ஜெயக்குமார்

எதிர்க்கட்சியாக செயல்படுவதில் அ.தி.மு.க. எதற்காக மந்தநிலையில் இருக்கிறது என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான டி,ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-
எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கையின் அடிப்படையிலும் தமிழகத்தில் எதிர்கட்சி அ.தி.மு.க. தான். இதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.செயல்படவில்லை என்றும் நாங்கள் பலவீனமாக இருப்பதாகவும் ஒரு பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்.
அதற்கு தி.மு.க.வும் உடந்தை. தேர்தல் வந்தால் இவையெல்லாம் அடிபட்டுப்போகும். அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி எப்போதும் மாறாது, சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் வாக்கு வித்தியாசம் மிக குறைவுதான்.
இப்போது தேர்தல் வந்தால் அ.தி.மு.க.தான் ஆட்சியை பிடிக்கும். எங்களின் வலிமை தி.மு.க.வுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் எங்களை பலவீனப்படுத்த ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. எப்போதுமே எதிரிதான், எங்களுக்குள்ள பங்காளி சண்டை தான் நடக்குது என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள். இந்த அண்ணன்-தம்பி கதை எல்லாம் 1972 லேயே முடிந்து விட்டது .
இவ்வாறு டி,ஜெயக்குமார் பதில் அளித்தார்.
