• May 20, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

 தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து அரசு மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.
அன்றைய தினம் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *