உலக அளவில் பிரபலமான பாப் பாடகர் லியாம் பெய்ன். இவருக்கென்று ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். 1டி என்றும் அழைக்கப்படும் குழுவில் பாடகராக இருந்தார். இதில் லியாம் பெய்ன், ஹாரிஸ் ஸ்டைல்ஸ், ஜெய்ன், லூயிஸ், நியால் ஹாரன் ஆகிய ஐந்து பேர் இருக்கிறார்கள். இவர்கள் பாடும் பாடல்களுக்கென்று இங்கிலாந்து மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் அந்த குழுவிலிருந்து விலகிவிட்டார். இந்த சூழலில் அவர் கேத் கேசிடி […]
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் நிறுவன ஊழியர்கள், கடந்த மாதம் 9-ம் தேதி முதல் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறையிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. அதன் பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சாம்சங் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சுமூகமாய் தீர்க்க தாமோ அன்பரசன், சிவி கணேசன், […]
ஜனவரி 1966 இருந்து மார்ச் 1971 க்கு இடையே வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மொத்தம் 5 நீதிபதிகளில் ஒருவர் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். நீதிபதிகள் சூர்ய காந்த், எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் ஒரே மாதிரியாக தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி பர்திவாலா 6A பிரிவு அரசியல் […]
பீகார் மாநிலம் பாகல்பூரை சேர்ந்த நபரை விஷ பாம்பு ஒன்று கடித்தது. பிரகாஷ் மண்டல் என்ற நபர், தன்னை கடித்த விஷ பாம்பின் வாயை பிடித்து, கழுத்தில் சுற்றி கொண்டு நேரடியாக மருத்துவமனைக்கு சென்றார். பாம்பு கடித்த நிலையில், அதனை கையில் வைத்துக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் நின்று கொண்டிருந்த நபரை பார்த்து டாக்டர்களும், நோயாளிகளும் திகைத்தனர். சிறிது நேரம் காத்திருந்த நபர் வலி தாங்க முடியாமல் கையில் பாம்பை வைத்து கொண்டு அங்கேயே படுத்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ர=அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி அடுத்துள்ள கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெள்ளநீர் செல்லக்கூடிய ஐந்தாவது மடை மற்றும் பெரியநாயகிபுரம் ஆபிரகாம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய் பகுதிகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒட்டப்பிடாரம், மணியாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள […]
தஞ்சை கோடி அம்மன் கோவில் தற்போது இருக்கும் பகுதி தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. அங்கிருந்தபடியே அவர்கள் இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களுக்கு இணையாக இறைவனை வழிபட்ட தஞ்சன் என்ற அசுரன் தேவர்களுக்கும் அதிகமான தகுதியைப் பெற்றான். தன்னுடைய சக்தியின் காரணமாக தேவர்களை துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் தஞ்சம் புகுந்தனர்.எனவே இறைவன் தஞ்சபுரீஸ்வரர் எனப்பட்டார். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். […]
தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில், கண்கள் கட்டப்படாத நீதி தேவதை சிலை சுப்ரீம் கோர்ட்டு நூலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதி தேவதையின் சிலையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருக்கும். இது உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்த்து நீதி வழங்கிட கூடாது, சரியான எடை போட்டு தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதை உணர்த்தவும்.,அநீதியை வீழ்த்திட வாளும் நீதிதேவதையின் அடையாளமாக கருதப்படுகிறது. மேலும் பணம், […]
காசிக்கு நிகராக போற்றப்படும் ராமேஸ்வரம் திருக்கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையது. சீதா தேவி ராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின் தன் கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்தார். அப்போது அக்னியின் சூடு, அக்னி பகவானாலேயே தாங்க முடியாததாக இருந்ததால், அவர் கடலில் மூழ்கி தன் வெப்பத்தை தணித்துக் கொண்டார். அந்த கடல் தான் இராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம். ராமேஸ்வரம் கோவிலில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள் காசிலிங்கம் :–ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை போக்கும், சிவலிங்கத்தைப் […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குவதாக இருந்தது. பெங்களுருவில் போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடுவதில் முதலில் தாமதம் ஏற்பட்டது. மழை […]