தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் என்ற கிராமத்தில், பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த “மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா” தர்ஹா மற்றும் பள்ளிவாசல் அமைந்துள்ளது. அனைத்து மத மக்களும் மதபேதமின்றி இங்கு வந்து ஆசிர்வாதம் பெறுகிறார்கள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இத்தகைய பெருமை கொண்டுள்ள இந்த வைப்பார் மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா தர்ஹாவில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா மதவேறுபாடின்றி அனைத்து தரப்பு மதத்தினராலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது […]
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) எஸ்.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணிம முதல் மதியம் 2 மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். அந்த இடங்கள் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பநேரி, குருவிகுளம், கோவில்பட்டி உபமின் […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்களின் புகார்கள் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 18.9.24 அன்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு வந்த ஒரு பெண் போலீஸ்சூப்பிரண்டு ஜான் ஆல்பர்ட்டிடம், தன்னை உத்திரபிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரி. கல்வித்துறை செயலாளராக பணிபுரிவதாக கூறி அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் தன்னிடம் தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 4-ந் தேதி வருடாந்திர பிரமோற்சவ விழா தொடங்குகிறது. 12-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவில் 8-ந் தேதி கருட சேவை நடக்கிறது. கருட சேவைக்கான அனைத்து துறைகளின் ஏற்பாடு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். கருட சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக கேலரிகள் வசதி செய்யப்படுகிறது. மேலும் பிரத்யேக வாசல்களும் அமைக்கப்படுகின்றன. முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் […]
விலங்குகளின் கொழுப்பு சேர்த்து திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பா? சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்கு
ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். அமராவதியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, “ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு கூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டது. நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தினார்கள். தற்போது தூய நெய் […]
குஜராத்தின் பவ்நகர் பகுதியில் சிஹோர் என்ற இடத்தில் தனியார் மருத்துவமனையில் , அவசர சிகிச்சை பிரிவில் பெண் ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. பெண்ணின் உறவினர்கள் சிலர் செருப்புகளை அணிந்தபடி அந்த அறைக்குள் சென்றனர். அப்போது அறைக்குள் வந்த டாக்டர் ஜெய்தீப் சின்ஹ கோகில், அவர்களிடம் செருப்புகளை வெளியே கழற்றி விட்டு, உள்ளே வரவும் என கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெண்ணின் உறவினர்கள் சேர்ந்து ஆத்திரத்தில் டாக்டரை […]
சமூக வலைதளங்கள் மூலம் மிகவும் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர ஜிபி முத்து. இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். ஜி.பி. முத்து, தூத்துக்குடியை மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். மரப்பொருள் வியாபாரம் செய்துவரும் இவருக்கு, உடன்குடி அருகே வெங்கடாசலபுரத்தில் அம்மன் கோவிலை நிர்வகித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் மகேஷ் என்பவர் பூஜை செய்துவந்த நிலையில், புரட்டாசி மாத பிறப்பையொட்டி மகேஷ் கோவிலில் பூஜை செய்வதற்காக வந்துள்ளார்/ அப்போது, அங்கு வந்த ஜி.பி. முத்து, பூசாரி மகேஷிடம் இனிமேல் […]
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமாக ‘கூலி’ பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கூலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா தொடர்பான படப்பிடிப்புக் காட்சிகளை இணையத்தில் மர்ம நபர்கள் வெளியிட்டனர். […]
ரஜினிகாந்தின் 170-வது படமான ‘வேட்டையன்’ அக்டோபர் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘மனசிலாயோ’ பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. அதன்படி, […]
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா – சிவா கூட்டணியில் உருவான கங்குவா படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தை அக்டோபர் 10ம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக்டோபர் 10ம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் […]