• June 8, 2025

தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டிடம் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக நடித்த பெண் கைது  

 தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டிடம் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக நடித்த பெண் கைது  

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்களின் புகார்கள் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 18.9.24 அன்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது 

இந்த கூட்டத்திற்கு  வந்த  ஒரு பெண் போலீஸ்சூப்பிரண்டு ஜான் ஆல்பர்ட்டிடம், தன்னை உத்திரபிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரி. கல்வித்துறை செயலாளராக பணிபுரிவதாக கூறி அறிமுகம் செய்து கொண்டார்.

பின்னர் தன்னிடம்  தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு நபர் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறியதுடன் அந்த நபர் மீது  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ஆல்பர்ட் ஜான், புகார் அளித்த பெண் ஐஏஎஸ் அதிகாரியா? என்பது குறித்து விசாரணை செய்ய மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அவர்கள்  விசாரணை நடத்தியதில் ஐஏஎஸ் அதிகாரி இல்லை என்றும், நெல்லை மாவட்டம் தாளையூத்து பகுதியை சேர்ந்த மங்கையர்க்கரசி என்பதும் தெரிய வந்தது,.

 அவருடன் வந்த நபர் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த நெல்லை மாவட்ட பாஜக இலக்கிய அணி தலைவர் ரூபிநாத் என்பதும் தெரியவந்தது இதனால் அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.

இதன்பேரில்  மங்கையர்க்கரசி மற்றும் ரூபிநாத் ஆகியோரை சிப்காட் போலீசார்  கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

போலீஸ் சூப்பிரண்டிடமே ஐஏஎஸ் அதிகாரி என்று பொய் சொல்லி ஒரு  பெண் சிக்கிகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *