கோவில் பூசாரியுடன் நடுரோட்டில் சண்டையிட்ட யூடியூபர் ஜி.பி.முத்து

சமூக வலைதளங்கள் மூலம் மிகவும் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர ஜிபி முத்து. இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
ஜி.பி. முத்து, தூத்துக்குடியை மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். மரப்பொருள் வியாபாரம் செய்துவரும் இவருக்கு, உடன்குடி அருகே வெங்கடாசலபுரத்தில் அம்மன் கோவிலை நிர்வகித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த கோவிலில் மகேஷ் என்பவர் பூஜை செய்துவந்த நிலையில், புரட்டாசி மாத பிறப்பையொட்டி மகேஷ் கோவிலில் பூஜை செய்வதற்காக வந்துள்ளார்/
அப்போது, அங்கு வந்த ஜி.பி. முத்து, பூசாரி மகேஷிடம் இனிமேல் கோவிலில் பூஜை செய்யக்கூடாது என்று கூறி இருக்கிறார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், கீக்டவே நா கூசும் வார்த்தைகளை ஜி.பி.முத்து பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பிரபலமான யூடியூபர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஜிபி முத்துவின் இந்த நடவடிக்கை அந்த பகுதினரை முகம் சுளிக்க வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக, குலசேகரன்பட்டினம் போலீசாரிடம் மகேஷ் தரப்பினர் புகார் செய்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
\
