• June 8, 2025

Month: September 2024

செய்திகள்

சென்னையில் போர்டு நிறுவனம், மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க முடிவு  

தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின்போது சிகாகோவில் போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். போர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க […]

செய்திகள்

அமெரிக்காவில் 17 நாட்கள் அரசு முறை பயணம் முடிந்து மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்

தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் 17 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது முதல்-அமைச்சர் முன்னிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை அவர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.இந்த நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சிகாகோ விமான நிலையத்தில் […]

செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் […]

செய்திகள்

ஜி.எஸ்.டி. பற்றி கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபருக்கு அவமரியாதை ; ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி  நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர் பேசும்போது, இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கும் நிலையில், காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. வெறும் பண்ணுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. ஆனால் ஜாமுடன் பண் வாங்கினால் ஜி.எஸ்.டி. உள்ளது. இதுபோன்ற முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கூறினார். இது தொடர்பான […]

செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறிய அரசு ; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். சமீப காலங்களில் ஊடகம் மற்றும் நாளிதழ்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினசரி செய்திகளாக வெளிவருவதைப் பார்த்து தமிழக மக்களுடன் நானும் மிகுந்த வருத்தமும், மன வேதனையும் அடைந்துள்ளேன். சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்த தவறிய இந்த திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பைபாஸ் சாலையில் 81 அடி உயர மதிமுக கொடிக்கம்பம் அமைக்கும் பணி

ராமநாதபுரத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதிமுக சார்பில்  நிரந்தரக் கொடிக்கம்பம் அமைக்கும் பணி தொடஞ்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி மத்திய ஒன்றியம், ஆவல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், கணேஷ் பேக்கரிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள இடத்தில், மதிமுக பொதுசெயலாளர் வைகோ வயதை குறிக்கின்ற  வகையில் பீடத்துடன் கூடிய 81 அடி உயர நிரந்தர கொடி கம்பம் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடிக்கம்பம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் […]

தூத்துக்குடி

குறுக்குசாலையில் 107 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குறுக்குசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுப்பணிதுறையின் மூலம் 76.73 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா], யூனியன் சேர்மன் திரு எல்.ரமேஷ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். மேலும் 107 மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்கள்.. மற்றும் முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கம் விளையாட்டுப் பிரிவில் மாநில அளவில் தேர்வாகியுள்ள மாணவ […]

சினிமா

தனுஷ் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கிறார்

தனுஷ் இயக்கி நடித்து வெளியான படம் ‘ராயன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனால் நாயகன் மற்றும் இயக்குநர் என இருவருக்கும் பாராட்டு தெரிவித்து 2 காசோலைகளை தனுஷுக்கு அன்பளிப்பாக வழங்கினார் கலாநிதி மாறன். தற்போது ‘குபேரா’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். மேலும், இயக்குநராக மட்டுமே பணிபுரிந்து வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் இறுதிகட்டப் பணிகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு, மீண்டும் […]

சினிமா

ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘வாழை’

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி வெளியான திரைப்படம் ‘வாழை’. இந்த படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ‘வெயில்’ படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘வாழை’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,  ‘வாழை’ திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளதாக […]