• May 20, 2024

Month: August 2023

செய்திகள்

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள்; முன்னாள் அமைச்சர் டி.

சென்னையில் உள்ள அ.தி.மு.க  தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாடு கண்டதில்லை என்கிற வகையில் மதுரை அ.தி.மு.க.  மாநாடு மகத்தாக அமையப்போகிறது. ஏற்கனவே கழகத்தின் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  தலைமையில்  மாநாட்டிற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறிப்பாக மதுரையை  சுற்றியுள்ள தலைமை […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்: அன்வர் ராஜா அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பு

அ.தி.மு.க.வில் இரண்டு அணிகளாக இருந்த போது  எடப்பாடி பழனிசாமி அணியில் இடம்பெற்று இருந்த முன்னாள் எம்.பி, அன்வர்ராஜா, 2 ஆண்டுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கட்சியின் பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரது தேர்வினை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதை தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில்  முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா இன்று […]

செய்திகள்

ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல 6 நாட்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 12-ந் தேதி முதல் 17-ம் தேதி வரை […]

தூத்துக்குடி

தங்க தேரில் பனிமயமாதா திருப்பவனி ; தூத்துக்குடியில் நாளை நடக்கிறது

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு 441-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடந்து வந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு […]

கோவில்பட்டி

சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர்; மாநகர மேயரை கரிசல் இலக்கிய அமைப்பினர் சந்தித்து

திருநெல்வேலி டவுண் முதல் குறுக்குத்துறை செல்லும் சாலைக்கு  நெல்லை கண்ணன் பெயரை சூட்டுவதாக நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அறிவித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவில்பட்டியை சேர்ந்த கரிசல் இலக்கிய அமைப்பின் நிறுவனர் கே.பி.ராஜகோபால், தலைவர் ஆர்.ஜே. மணிகண்டன், சட்ட ஆலோசகர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மாநகர மேயர் சரவணனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 16 ம் தேதி நெல்லை கண்ணன் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் வளைகாப்பு விழா

கோவில்பட்டி மந்தித்தோப்பு  ரோடு லெனின் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு வளைகாப்பு விழா நடைப்பெற்றது. இதனையொட்டி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு  முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைப்பெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு  வளைகாப்பு விழா கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை சீர்வரிசை தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதணை நடைபெற்றது. பிறகு 11 சீர்வரிசை தட்டுகள் கோவில் வளாகத்தை சுற்றி வந்து அம்பாள் சன்னதியில் வளைகாப்பும் சிறப்பு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா கடந்த 30-ந்தேதி காலை 9 மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார சிறப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. இரவு 7 மணிக்கு அங்கையர்கண்ணியின் அருள் என்ற தலைப்பில் தேவி பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. 2-ம் நாள் காலை 9 மணிக்கு அம்மனுக்கு சந்தன அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சர்வம் சக்திமயம் என்ற தலைப்பில் சித்ரா கணபதியின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. […]

ஆன்மிகம்

ராமரை மனதார வணங்கினால் மோட்சம் நிச்சயம்

பறவையான ஜடாயுவை தன் தந்தையாகவே பாவித்து, அந்திம க்ரியைகளை செய்தான் ராமன். .. இன்றைக்கும் காஞ்சீபுரம் அருகில், திருப்புட்குழி தலத்தில், ஜடாயு மகாராஜாவுக்கு ஈமச்சடங்குகள் செய்தவனாக, ஸ்ரீவிஜயராகவனாக தரிசனம் தந்தருள்கிறான். எண்ணற்ற குணநலன்கள் ஸ்ரீராமனிடம் இருந்தாலும், அடுத்தவரது துன்பத்தை, தனது கஷ்டமாக கருதி, அவற்றை தீர்க்க முற்படுவது, ஸ்ரீராமனின் தலையாய பண்பு எனப் போற்றுகிறது ராமாயணம். வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித: என்ற பிரமாணத்தின் மூலம் இதை நாம் அறியலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அடுத்தவர் நலனை […]

செய்திகள்

எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு : பெயிண்டை அகற்றி, டி.ஜெயக்குமார் பால் அபிஷேகம்

சென்னை:- ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் இருக்கும்  எம்.ஜி.ஆர். திருவுருவ சிலையை மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் சிவப்பு நிற பெயிண்டை ஊற்றி அவமதிப்பு செய்து உள்ளனர். மறுநாள் காலையில் இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க. வினர் அதிக அளவில் அங்கு கூடினர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நேரில் வந்து எம்ஜிஆர் சிலையை பார்வையிட்டார். சிலை மீது இருந்த சிவப்பு நிற பெயிண்டை  தின்னர் மூலம் […]

கோவில்பட்டி

ஆடி பெருக்கு 2023 : மாங்கல்யம் மாற்ற உகந்த நேரம் இதுவே….

ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந் தேதியை குறிக்கும்.  ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் ஒரு பண்டிகையே ஆடிப்பெருக்கு ஆகும்.  ஆடிப்பெருக்கை ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி என்றும் மக்கள் அழைப்பார்கள். ஆடிப்பெருக்கு தினத்தின் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தாலி பிரித்து கோர்ப்பதே ஆகும். புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி 18 என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும்.  படித்துறைகளில் குவியும் புதுமணத் தம்பதிகளில் மனைவிமார்களுக்கு […]