• May 2, 2024

Month: June 2022

செய்திகள்

இலங்கையில் நெல் சாகுபடிக்கு 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா ஒப்புதல்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதே சமயம் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள், மருந்து மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி இந்தியா உதவி வருகிறது. இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று இலங்கை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினார்.அப்போது இலங்கைக்கு கடன் உதவித் […]

கோவில்பட்டி

பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற நர்சு; டாக்டர் மீது வழக்குபதிவு

கோவில்பட்டியை சேர்ந்தவர் பழைய பஸ் நிலையம் அருகே ஆஸ்பத்திரி நடத்தி வருபவர் டாக்டர் முரளி (வயது 58). இவருடைய ஆஸ்பத்திரியில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண் சில நாட்களுக்கு முன்பு நர்சு வேலைக்கு சேர்ந்தார்.சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் நோயாளிகளை பார்க்க சென்ற ஒவ்வொரு வார்டாக சென்ற டாக்டர் முரளியுடன் அந்த நர்சும் சென்றார். அப்போது அந்த நர்சுக்கு டாக்டர் முரளி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறதுஇதனால் மனமுடைந்த அந்த நர்சு வீட்டிற்கு சென்றதும் தூக்க மாத்திரை […]

தூத்துக்குடி

கொலைவழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு ஆல்பர்ட் அன் கோ ஜங்ஷன் பகுதியில் எஸ்.எஸ் மூர்த்தி தெருவை சேர்ந்த பிரபு (வயது 41) என்பவர் கடந்த 6.5.2022 அன்று அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.முன்விரோதம் காரணமாக மேல சண்முக புரத்தைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் சூப்பி (எ) செல்வசதீஷ் (23), வண்ணார் தெருவை சேர்ந்த சரவணன் மகன் ஜெயக்குமார் (எ) எலும்பு அருண் (19), தாமோதர நகரை சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (எ) சொரி (21), சத்யா நகரை […]

செய்திகள்

மாணவியை கத்தியால் குத்தியவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் இறுதித் தேர்வு எழுதி முடித்துவிட்டு மாலை வீடு திரும்பினார். திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே மாணவி வந்தபோது, அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், வாக்குவாதம் செய்திருக்கிறார். வாக்குவாதம் முற்றியபோது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்திவிட்டு […]

செய்திகள்

அரசியல் ரீதியாக சிவாஜி கணேசனை ஒப்பீடு செய்வதா? முத்தரசனுக்கு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர்

தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே. சந்திரசேகரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் , நரேந்திர மோடியின் செயல்பாடுகளைப் பற்றி விமர்சிக்கும்போது, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால், தன்னுடைய நடிப்புத் திறமைக்காகப் பெற்ற செவாலியே உள்ளிட்ட விருதுகளை, பிரதமர் மோடிக்கு கொடுக்கச் சொல்லியிருப்பார் என்று கிண்டலாக கூறியிருக்கிறார். இப்படி ஒப்பிட்டுப் பேசியிருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். திரையுலகில் மட்டுமல்ல, பொதுவாழ்விலும் யாருடனும் ஒப்பிட முடியாதவர் […]

கோவில்பட்டி

பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியை அடுத்த அஞ்சுரான்பட்டி ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊர்மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.கும்பாபிஷேக விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் .நவநீத கண்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சின்ன மாரிமுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்இம்மானுவேல் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சிறப்பு பணி பதக்கம்

2021ம் ஆண்டிற்கான காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு அலுவலராக பணியாற்றி வரும் கன்னியாகுமரி மாவட்டம் குற்ற பிரிவு குற்ற புலனாய்வு துறை (சி.பி.சி.ஐ.டி.) இன்ஸ்பெக்டர் சாந்திக்கு 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் காவல் புலன்விசாரணை சிறப்பு பணி பதக்கத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் சிறப்புப்பணி பதக்கம் பெற்ற இன்ஸ்பெக்டர் சாந்தி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை […]

தூத்துக்குடி

27 இளஞ்சிறார்கள் ஓட்டிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; பெற்றோர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

தூத்துக்குடியில் காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் 27 பேர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மேற்படி இளஞ்சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கி 18 வயது நிறைவடையாமல் வாகனம் ஓட்டக் கூடாது என்று எச்சரித்தார். மேலும் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்களை உரியவர்களிடம் […]

செய்திகள்

`மக்கள் பணி தொடரும்’-ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ரவி பேச்சு

சென்னை தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தின் முதல் போலீஸ் கமிஷனர் என்ற பெருமை பெற்ற டி.ஜி.பி.ரவி, நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு வழி அனுப்பு விழா, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.விழா தொடக்கத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வரவேற்று பேசினார். டி.ஜி.பி.சைலேந்திரபாபு விழாவுக்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-நானும், ரவியும் மதுரை வேளாண்மை கல்லூரியில் ஒரு ஆண்டு ஒன்றாக படித்தோம். அதன்பிறகு நான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி செய்தேன். […]