கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்

பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (செவ்வாய்) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேத மங்கலத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

22-ந்த்தேதி வரை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் 9-வது நாளான 19-ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. அன்றைய மண்டகப்படிதாரர் வணிக வைசிய சங்கம்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 22-ந்தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது, திரயோதசி திதியும் உத்திர நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுப தினத்தில் இரவு 7.3௦ மணிக்கு மேல் 8.15 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். பின்னர் சுவாமி யானை வாகனத்திலும் அம்மன் பல்லக்கிலும் பட்டணபிரவேஷம் நடைபெறும். அன்றைய மண்டகபடிதாரர் முடுக்குமீண்டான்பட்டி ஆவுடையப்பன் செட்டியார் குடும்பத்தினர் ஆவர்.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
