• June 7, 2025

கோவில்பட்டியில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ் ; போக்குவரத்து நெரிசல்-மக்கள் அவதி

 கோவில்பட்டியில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ் ; போக்குவரத்து நெரிசல்-மக்கள் அவதி

சாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பஸ். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு முன் எடுத்த படம்

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சிவஞானபுரம் கிராமத்துக்கு இன்று காலை 8.25 மணி அளவில் அரசு டவுண் பஸ் புறப்பட்டு சென்றது.
பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் மாதாங்கோவில், கிருஷ்ணன்கோவில் தெருக்கள் சந்திக்கும் இடத்தை தாண்டியவுடன் திடீர் கோளாறு ஏற்பட்டது. பஸ்சின் ஸ்டியரிங் பாக்ஸ் உடைந்து பஸ் நகரமுடியாமல் நின்று விட்டது.
முக்கிய சந்திப்பான இந்த இடத்தில் காலை நேரத்த்தில் வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு போக்குவரத்து போலீஸ்காரர்கள் இருப்பார்கள். அவர்கள் பஸ் பழுதாகி நின்றவுடன் போக்குவரத்தை சீர்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டினார்கள். போலீஸ் கண்ட்ரோல் அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாதாங்கோவில் ரோட்டில் நெரிசல் தொடங்கிய நேரம்


இதற்கிடையே பழுதாகி நின்ற பஸ்சை நகர்த்த யாரும் இல்லை. போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து உடனடியாக யாரும் வரவில்லை. காலை நேரம் என்பதால் வாகன போக்குவரத்து அதிகமாகி விட்டது. பள்ளிக்கூட வேன்கள் அதிகம் வந்தவண்ணம் இருந்தன.
தகவல் அறிந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என 1௦-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
அவர்கள் அதிரடியாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். பழுதாகி நின்ற பஸ்சை நகர்த்தி, பின்னர் பணிமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கபட்டது. இந்த பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே பஸ் நிலைய மெயின்ரோடு, இளையரசனேந்தல் ரோடு, கிருஷ்ணன் கோவில் ரோடு, மாதாங்கோவில் ரோடு, மார்க்கெட்ரோடு, ரெயில்நிலைய ரோடு பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து போலீசார் வாகனங்களை வெவ்வேறு சாலைகளில் திருப்பி விட்டனர். இதனால் போக்குவரத்து மெதுவாக சகஜ நிலைக்கு திரும்பியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கிகொண்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வழக்கமாக அரசு பஸ்கள், பணிமனையில் இருந்து கிளம்பும்போது சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்று சரிபார்த்து தான் வரவேண்டும் என்ற நியதி சரியாக கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இது போன்ற இடையூறு ஏற்பட்டு இருக்காது. எனவே இனிமேலாவது இது போன்ற நிலைமை வராமல் இருக்க போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *