அதிகாரிகளுக்கு சாபம்: வேப்பமரத்தில் மனுவை கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை, கொடுக்கும் மனுக்கள் காணமால் போகின்றன, பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் புகார் கூறி இந்த போராட்டம் நடைபெற்றது
பின்னர் அலுவலக வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் தங்கள் மனுவை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊழல் அதிகாரிகளை சாபமிடுகிறோம் என்று கோஷம் எழுப்பினார்கள். மேலும் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு நீதி வேண்டும், நீதி வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்கள்.
