இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ராமநாதபுரம் அப்பாஸ் அலி நியமனம்

நேபாளம் செல்லும் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராமநாதபுரம் அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுச் செயலாளர் ஹாரூண் ராஷித் கூறி இருப்பதாவது:-
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் நேபாளத்துக்கு செல்ல இருக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இந்த போட்டிகள் நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள முல்பானி கிரிக்கெட் அரங்கில் வரும் 10, 11 மற்றும் 12 -ந் தேதிகளில் நடக்க இருக்கிறது.
இந்த போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் பயிற்சியாளராக பங்கேற்ற அனுப
இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
ராமநாதபுரம் கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளிக்கூடத்தின் உடற்பயிற்சி ஆசிரியராக அப்பாஸ் அலி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்,
