• June 7, 2025

கனவு இல்லத்திட்டம்: 6 எழுத்தாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு

 கனவு இல்லத்திட்டம்: 6 எழுத்தாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3.6.2021 அன்று, ”தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்” என்று கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.
வீடு பெறும் எழுத்தாளர்கள் அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதி பிறந்த நாளில் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், 2004-ம் ஆண்டு “வணக்கம் வள்ளுவ” எனும் கவிதை நூலிற்காக சாகித்திய அகாடமி விருது மற்றும் 2018-ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினையும் பெற்ற ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பனுக்கு சென்னை, திருமங்கலத்தில் முதல் தளம் அடுக்குமாடி குடியிருப்பு இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளத
2009-ம் ஆண்டில் “கையொப்பம்” எனும் கவிதை நூலிற்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதனுக்கு கோவை வீட்டுவசதி பிரிவு – கணபதி திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 2012-ம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற இ. சுந்தரமூர்த்திக்கு கோயம்பேடு திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு ஆண்டு ‘அஞ்ஞாடி’ எனும் புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகத்திற்கு கோயம்பேடு திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 2014-ம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற கு. மோகனராசுக்கு அண்ணாநகர் சாந்தி காலனி நடுவாங்கரை திட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு ‘செல்லாத பணம்’ எனும் புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற இமையம் என்கிற வெ. அண்ணாமலைக்கு சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட 6 எழுத்தாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *