• June 7, 2025

கோவில்பட்டியில் புத்தககண்காட்சி ஜூன்-9 வரை நீட்டிப்பு

 கோவில்பட்டியில் புத்தககண்காட்சி ஜூன்-9 வரை நீட்டிப்பு

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூன்-9ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சியில் சாகித்திய அகடாமி விருது பெற்ற புத்தகங்கள்,வரலாறு,இலக்கியம்,நாவல், டி.என்.பி.சி, போலீஸ், நீட், ஆர்ஆர்பி தேர்வுகளுக்கான புத்தகங்கள், உள்ளிட்ட 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் விற்பனையாகும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.

மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் ரவிவர்மா தெரிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *