• June 7, 2025

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: இன்றைய காலை போட்டியில் சென்னையை வென்ற செகந்திராபாத் அணி

 கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: இன்றைய காலை போட்டியில் சென்னையை வென்ற செகந்திராபாத் அணி

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

போட்டியின் நான்காம் நாளான இன்று( 26ம் தேதி) காலை 7. மணி அளவில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதின.

இரு அணிகளும் பலம் வாயந்ததாக இருந்ததால் ஆட்டம் மிகவும் கடுமையாக இருந்தது. முதல் கோல் போடுவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

அந்த சமயத்தில்  செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி வீரர் மனிஷ் குமார் 27வது நிமிடத்தில் (பீல்டு கோல்) கோல் அடித்து பலத்த கைதட்டலை பெற்றார்.

அதன்பிறகு ஆட்டத்தில் சூடு பிடித்தது. ஆனாலும் எதிர் அணியினரால் கோல் போடா முடியவில்லை. செகந்திராபாத் அணியினரும் ஒரு கோலுக்கு மேல் அடுத்த கோல் போட முடியவில்லை. இதனால் 1:0 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி வெற்றி பெற்றது.

சுரேஷ் குமார் மற்றும் அஜித் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி வீரர் சையத் நியாஷ் ரஹீம்-க்கு வழங்கப்பட்டது.

மாலை நடக்கும் போட்டிகள்

இன்று மாலை 5. மணியளவில் நடைபெறும் 14வது லீக் போட்டியில் சென்னை இன்டர்க்ரல் கோச் பேக்டரி அணியும், பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணியும் மோதுகின்றன.

மாலை 6.30 மணியளவில் நடைபெறும் 15வது லீக் போட்டியில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதுகின்றன.

இரவு 8. மணியளவில் நடைபெறும் 16வது லீக் போட்டியில் மும்பை சென்ட்ரல் ரெயில்வே அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதுகின்றன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *