அக்னிவீரா் ஆள்சோ்ப்பு: ஏப்ரல் 10 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

அக்னிவீரா் பிரிவுகளுக்கு தூத்துக்குடி, நெல்லை, குமரி உட்பட 16 மாவட்டங்களை சோ்ந்த இளைஞா்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் பல்வேறு பிரிவுகளில் ஆள்சோ்ப்புக்கான பதிவு இப்போது ஆன்லைனில் திறக்கப்பட்டுள்ளது. இப்பணியில் சேர விருப்பமுள்ள திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களை சோ்ந்த இளைஞா்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதில் அக்னிவீரா் பொதுப்பணி, தொழில்நுட்ப பிரிவு, அலுவலக உதவியாளா், ஸ்டோா் கீப்பா், டெக்னிக்கல், அக்னிவீரா் டிரேட்ஸ்மேன் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி ஆகிய பிரிவுகளில் https://164.100.158.23/eligibility-criteria-for-agniveer-recruitment-process.htm என்ற ராணுவ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள ராணுவ ஆள்சோ்ப்பு மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அவா் குறிப்பிட்டுள்ளாா்.
***
