கோவில்பட்டி அருகே சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி மீது 2 கார்கள் மோதி விபத்து

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் உச்சிமாகாளி, கண்டெய்னர் ஓட்டுனர். தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி வழியாக மதுரையை நோக்கி கண்டெய்னர் லாரியை ஓட்டிச்சென்றார்.
கோவில்பட்டியை கடந்து சிவனைந்தபுரம் சோதனைச் சாவடியை கடக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சாலையின் நடுவே தடுப்பு சுவரின் மீது மோதி சாலையில் தலைக்குபுற கவிழ்ந்தது.
அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த 2 கார்கள், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், ஏற்கனவே கவிழந்து கிடந்த கண்டெய்னர் லாரி மீது மீது மோதின. இதில் இரண்டு கார்களும் பலத்த சேதம் அடைந்தன. இந்த விபத்தில் நல்ல வேளையாக உயிரிழப்பு எதுவும் இல்லை.4 பேருக்கு காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் போலீசார் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் மூலம் அகற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.
விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாற்று சாலையில் வழியாக செல்லும் வாகனங்களை போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சாத்தூர் தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
