கோவில்பட்டியில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா

கோவில்பட்டி மெயின்ரோடு பகுதி மார்க்கெட் ரோடு எதிரில் அமைந்துள்ள பறக்கும் படை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்திற்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் மாடசாமி, செயலாளர் காளிராஜ், பொருளாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்திணவேல், அதிமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சங்கர்கணேஷ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன்,மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அம்பிகைபாலன், மகளிரணி கோமதி, பிரபாவதி, அதிமுக நிர்வாகிகள் வேல்முருகன், சாத்தூரப்பன் ,குழந்தைவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
