அறுந்து கிடந்த மின் வயர் கழுத்தில் சிக்கி உயிரிழந்த கூலி தொழிலாளி

 அறுந்து கிடந்த மின் வயர் கழுத்தில் சிக்கி உயிரிழந்த கூலி தொழிலாளி

கயத்தாறு அருகே சிவஞானபுரம் ஊராட்சி வாகைகுளம் கிராமத்தில் சாலையில் இருந்த மின் கம்பத்தில் இருந்த மின் வயர் அறுந்து தரையை நோக்கி தொங்கி இருந்தது‌ 

நேற்று அதிகாலையில் அந்த வழியாக நடந்து சென்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த முருகன்(40) என்பவர் கழுத்தில் தொங்கி கிடந்த மின்வயர் சிக்கிகொண்டது. அடுத்த வினாடி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் இந்த் துயர காட்சியை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்./ உடனடியாக அவர்கள் விரைந்து வந்தனர். மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கபட்டு மின் இணைப்பு துண்டிக்கபப்ட்டது.

அதன்பிறகு முருகன் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *