மகளிர் சுய உதவி குழுவில் ரூ.13.45 லட்சம் மோசடி செய்த பெண் மீது ஆட்சியரிடம் புகார்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி எஸ்.எஸ். கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி வஜிலா (வயது 40) என்பவர் தலைமையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறி இருபதாவது:-
எங்கள் தெருவில் சுமார் 600 மேற்பட்ட குடும்பங்கள் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் நான் மற்றும் எங்கள் பகுதியை சார்ந்த மலர்விழி ராஜேஸ்வரி என்பவரும் சேர்ந்து மகளிர் சுயகுழு ஒன்று ஆரம்பித்து கடன் கொடுத்து பணத்தை திருப்பி வாங்கி கொள்வது வழக்கம்.
அதே போல் வாரம் ரூ.100 வீதம் 525 உறுப்பினர்கள் மூலமாக தீபாவளி மற்றும் பொங்கல் குழு என மக்களிடம் பணத்தை வசூல் செய்து மேற்படி தொகையை அவசர தேவைக்காக கடனாக கொடுத்து அந்த கடனை பத்து மாத தவனையில் திரும்ப செலுத்துவார்கள். பணத்தை பண்டிகை காலங்களுக்கு முன்பாக திரும்ப பெற்று உறுப்பினர்களிடம் ஒப்படைவு செய்வது வழக்கம்.
அதே போல் எங்கள் தெருவில் வசித்து வரும் மேற்கண்ட உத்திரசெல்வி என்பவர் குடும்ப அவசர தேவைக்காக எங்களிடம் இருந்து விநாயகர் சுய உதவி குழுவில் உள்ள சேமிப்பு தொகை ரூ.3,46,400-மற்றும் பொங்கல் குழு தொகை ரூ.1,67,600-இருந்து சேமிப்பு தொகை 5.13,45,250- வும் எங்களிடம் இருந்து கடனாக பெற்றுக் கொண்டார்.
2024 தீபாவளி வரும் போது மேற்கண்ட உத்திரசெல்வியிடம் பணத்தை தாருங்கள் என்று கேட்ட போது நாளை, நாளை என ஏமாற்றி எங்களுக்கு தர வேண்டிய பணம் ரூ.13,45,250-ஐ தராமல் ஏமாற்றி வந்தவர் திடீர் என தலைமறைவு ஆகிவிட்டார்.
இந்நிலையில் நாங்கள் கடந்த 14.10.2024 தேதி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து மனு எண் 802/2024 ஆகி விசாரணை செய்து இரண்டு மாதத்திற்குள் எங்களுடைய பணம் 5.13,45,250 தருவதாக காவல் நிலையத்தில் ஒப்புக்கொண்டு அன்றைய தினமே எழுதி கொடுத்தார்.
மேற்படி எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தாரமல் எங்களை வேண்டும் என்றே ஏமாற்றி வருகிறார். எனவே எங்களிடம் இருந்து கடனாக பெற்றுக் கொண்டு தீபாவளி குழு ரூ.8,31,250 பொங்கல் குழு ரூ.1,67,600- விநாயகர் மகளிர் சுயஉதவி குழு ரூ.3,46,000 என மொத்தம் ரூ.13,45,250-யை திரும்பி பெற்று எங்களை ஏமாற்றி வரும் உத்திரசெல்வி மற்றும் அவரது கணவர் கணேசன் என்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
