வேம்பார் கடற்கரையிலிருந்து இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்திய 8 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

 வேம்பார் கடற்கரையிலிருந்து இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்திய 8 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

கடந்த 2022ஆம் ஆண்டு  தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் என்ற போதை பொருள் கடத்த முயன்றதாக தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த இருதயவாசு ( 43 ), கிங்பன் ( 25 ), சிலுவை ( 44 ), அஸ்வின் ( 26 ),  சுபாஷ் ( 26 ), கபிலன் ( 22 ), சைமன் முத்து ( 29 ), ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த வின்ஸ்டன் ( 25 ) ஆகிய 8 பேரை தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 9.985 கிலோ கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றினர்.

மதுரை முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் தங்கேஷ்வரன் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.செங்கமலச்செல்வன் தீர்ப்பளித்தார்.

கடத்தலில் ஈடுபட்ட 8 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும், அனைவருக்கும் தலா ஒரு லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *