• June 7, 2025

அதானிக்கு அமெரிக்க கோர்ட்டு பிடிவாரண்டு விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

 அதானிக்கு அமெரிக்க கோர்ட்டு பிடிவாரண்டு விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது., அடுத்த மாதம் 20-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது  இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.

எதிர்க்கட்சிகளால் கடும் எதிர்ப்பை சந்தித்த இந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழு, மசோதா தொடர்பான அறிக்கையை குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதன்படி இந்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மசோதாவை தவிர பஞ்சாப் கோர்ட்டுகள் (திருத்தம்) மசோதா, வணிக கப்பல் மசோதா, கடலோர கப்பல்கள் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமை தாங்கினார்.  அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது  இதை தொடர்ந்து மணிப்பூர் வன்முறை, லஞ்ச வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஐகோர்ட்டு பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஜெகதீப் தங்கர் இன்று நாள் முழுவதும் அவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்

மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையிலும் எதிக்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன, இதானால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே இன்று  அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால் இரு அவைகளின் வழக்கமான அமர்வுகள் நடைபெறாது அடுத்ததாக புதன்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2024-25-ம் நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளின் முதல் பகுதியும் தாக்கல் செய்யப்பட்டு விவாதித்து நிறைவேற்றவும் பட்டியலிடப்பட்டு உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான மசோதாக்கள் எதுவும் இந்த தொடருக்காக மத்திய அரசு பட்டியலிடவில்லை. எனினும் அந்த மசோதாவை வருகிற தொடரிலேயே தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இந்த சூழலில், மணிப்பூர் வன்முறை, லஞ்ச வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஐகோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *