• June 8, 2025

கோவில்பட்டியில்  பெண் தொழில் முனைவோர்  கலந்தாய்வு கூட்டம்

 கோவில்பட்டியில்  பெண் தொழில் முனைவோர்  கலந்தாய்வு கூட்டம்

 ஹேண்ட் இன் ஹேண்ட்  இந்தியா, சர்வம் பைனான்சியல் இன்க்லூசன் டிரஸ்ட் சார்பில்  பெண் தொழில் முனைவர்களின் வெற்றி கலந்தாய்வு கூட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு தங்கம் மஹாலில் நடந்தது.

இக்கூட்டத்தில் 131 பெண் தொழில் முனைவோர்கள்  கலந்து கொண்டனர் தகுதிவாய்ந்த 13 பெண் தொழில் முனைவோர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு முதன்மை பொது மேலாளர்ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். உதவி பொது மேலாளர் பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார்,

வாழ்ந்து காட்டுவோம் திட்ட  மாவட்ட செயல் அலுவலர் தாமோதரன், பெல்ஸ்டார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன மண்டல மேலாளர் முத்துமலை ஆகியோர் கலந்து கொண்டு பெண் தொழில்முனைவோர் கடன் பெறும் வசதிகள் பற்றியும், வக்கில் ஜெயஸ்ரீ பெண்  உரிமைகள், அதிகாரம் குழந்தை வளர்ப்பு முறைகள் குடும்ப வன்முறை பற்றியும் பேசினார்கள் .

வழக்கறிஞர் சௌந்தர்யா பெண் பாதுகாப்பு, சைபர் கிரைம், மொபைல் போன் முறையாக பயன்படுத்தல்  இலவச சட்ட உதவிகள் முகாம் பற்றியும் பேசினார். உதவி பொது மேலாளர் சந்திரசேகர்,   முதன்மை மேலாளர் மதுரை அழகர், கள ஒருங்கிணைப்பாளர்கள் சிலுவைக்கொடி , கனகவல்லி கோபிகிருஷ்ணன், சித்ரா, மதன்குமார், திவ்யா உள்பட ஏராளமான பெண்தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *