மாதந்தோறும் மின்சார பயன்பாடு கணக்கீட்டு பணி; தூத்துக்குடி ஆட்சியரிடம் கோரிக்கை மனு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோவில்பட்டியில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டபோது கோவில்பட்டி அப்பனேரி ஸ்ரீவெங்கடேஸ்வரா கார்டன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தமிழக அரசின் மின் கட்டணத்தில் ஒழுங்குமுறை ஆணையம் எடுத்துள்ள முடிவின்படி ஒரே வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ள வீடுகளில் தனித்தனி கட்டணம் கட்டி வந்த நிலையில் அதை ஒரே இணைப்புக்கான பில் தொகையாக மாற்றி எவ்வித முன்னறிவிப்பின்றி ஒரே இணைப்பாக கருதி மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி மக்கள் மீது பெரும்சுமையை கொடுத்துள்ளது.
ஆகையால் தனித்தனி இணைப்பாக உள்ள வீடுகளில் எப்பொழுதும் போல் உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் அவ்வாறு இல்லையெனில் மாதம் மாதம் மின் கட்டணம் கணக்கெடுத்து மக்கள் பணசுமை, மனசுமையை குறைக்க உதவ வேண்டும். இதை மாவட்ட ஆட்சித் தலைவர் அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுத்து உதவ வேண்டுகிறோம்.:
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
