கிராமசபை கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.பங்கேற்பு

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலசேகரநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா கலந்து கொண்டு பேசினார்..
கிராமசபை கூட்டத்தில் கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்கப்பட்டு துறைசார்ந்த அதிகாரிகளிடம் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது…
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் .சித்தார்த்தன்வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, வேளாண்மை உதவி இயக்குநர் சிவகாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், ஆறுமுகராஜ்
மன்வாரிய உதவி பொறியாளர் .மணிசேகர் ,வட்டார சுகாதார ஆய்வாளர் காளிமுத்து வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் .லட்சுமி. வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் குருநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் ,ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…
