• June 8, 2025

மெட்டா நிறுவனதிற்க்கு ரூ.213 கோடி அபராதம் விதித்த சிசிஐ

 மெட்டா நிறுவனதிற்க்கு ரூ.213 கோடி அபராதம் விதித்த சிசிஐ

கடந்த 2021-ல் வாட்ஸ் அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பு சார்ந்த விவகாரத்தில் தவறாக நியாயமற்ற முறையில் வணிக ஆதாயம் சார்ந்த முயற்சியை மேற்கொண்ட காரணத்துக்காக மெட்டா நிறுவனத்துக்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது.

மேலும், இந்த போட்டி நடைமுறையை நிறுத்தவும் சிசிஐ அறிவுறுத்தியுள்ளது. அதற்கான தீர்வை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மெட்டா மற்றும் வாட்ஸ் அப் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் தளத்தில் சேகரிக்கப்படும் பயனர்களின் தரவுகளை மெட்டாவின் மற்ற தளங்களுடன் விளம்பர காரணங்களுக்காக பகிர்வதை தடுப்பதும் இதில் அடங்கும். வாட்ஸ்அப் சேவையை பயனர்களுக்காக நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்றும் சிசிஐ தெரிவித்துள்ளது. மெட்டா அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்திய காரணத்துக்காக மெட்டாவுக்கு ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது சிசிஐ.

இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடிக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களையும் மெட்டா நிர்வகித்து வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *