வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் களம் கண்டனர்.
தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால் டிரம்பின் ஆதரவாளர்கள் தங்களது கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற எனது நண்பர் டிரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு மற்றும் உலகளாவிய அமைதியை எதிர்நோக்கி உள்ளேன். மக்கள் முன்னேற்றம், உலகளாவிய அமைதி நிலைத்தன்மை ஆகியவற்றிற்காக இரு நாடுகளும் இணைந்து பாடுபடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
