வரும் 6-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமை கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் (6.11.2024) புதன் கிழமை காலை 10 மணிக்கு, மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த மாநில கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் பிற மாநில கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
