• June 7, 2025

முதலமைச்சருடன் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் சந்திப்பு

 முதலமைச்சருடன் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் சந்திப்பு

கோவில்பட்டி நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம், சாத்தூர் – தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் செ.லட்சுமணன், சிவகாசி –  அகில இந்திய மேட்ச் சேம்பர் தலைவர் . ஜெ.விஜய் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்தனர்.

 ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய குறைவான விலை கொண்ட பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து தற்போது சீனாவிலிருந்து சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் சமீபத்தில்  தடை விதித்துள்ளது.

மத்திய அரசை வலியுறுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காகவும், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நலன் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுத்தமைக்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது கனிமொழி எம்.பி.மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், கீதாஜீவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *