வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை: நடிகர் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர்களில் ஒருவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் பல திரைப்படங்களை இயக்கி அவரே அதில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது பல திரைப்படங்களில் வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் குழந்தைகளை மையமாக கொண்டு ‘டீன்ஸ்’ என்ற சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கினார்.
சினிமா மட்டுமின்றி பல சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன். தற்போது அதற்கு உதாரணமாக பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்., வந்தே பாரத் ரயிலில் தந்த உணவு தரமாக இல்லை.பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை.ஆரோக்கிய கேடு என சுற்றத்தார் முணுமுணுத்தார்கள். அதனால் நான் புகார் புத்தகத்தை வாங்கி அதில் சில கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நான் அதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியம். என தெரிவித்துள்ளார்.
