• June 8, 2025

பஸ்களில் `நெய்தல் கலைத் திருவிழா ஸ்டிக்கர்’ ஒட்டினர் கனிமொழி

 பஸ்களில் `நெய்தல் கலைத் திருவிழா ஸ்டிக்கர்’ ஒட்டினர் கனிமொழி

தூத்துக்குடி எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியிலுள்ள திடலில் 3-வது நெய்தல் கலைத் திருவிழா வரும் அக்டோபர் 11ம் தேதி – 13ம் தேதி வரை (3 நாட்கள்) மற்றும் தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழா வருகின்ற அக்.3 முதல் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி “நெய்தல் திருவிழா மற்றும் புத்தக கண்காட்சி” வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை (ஸ்டிக்கர்) பேருந்துகளில் ஒட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,  ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *