பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ,தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமானஜி.வெங்கடாஜலம், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.பாலசுப்ரமணியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜு,எல்.ரவிச்சந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் மோகன், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சரவணன், மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் ஈஸ்வரன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு சேலம் மண்டல செயலாளர் எம்.நல்லப்பன், பகுதி கழக செயலாளர்கள் ஏகேஎஸ்.எம்.பாலு, முருகன், மாநகராட்சி எதிர்க்கட்சி கொரடா கே.சி.செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஜனார்த்தனன், ஆணைவரதன், சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் அருள்ராம், மற்றும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டனர்.
