எந்த காலத்திலும் தமிழக மக்கள் பாஜக வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்-டி.ஜெயக்குமார்

கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர், கலந்துரையாடல் கூட்ட்டத்தில் பேசியதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்கும் வீடியோ நேற்று வைரல் ஆனது. இது பற்றி அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு! என்ற தலைப்பில் கூறி இருப்பதாவது:-
மத்திய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்தார். அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல்!
அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்! கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான்!
இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும்!
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.
