கோவில்பட்டி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கடம்பூர் ராஜு தலைமையில் வரவேற்பு

அதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து கோவில்பட்டி வந்தார்.
காலை 9.3௦ மணி அளவில் கே.ஆர்.விருந்தினர் மாளிகைக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.யும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய அதிமுக செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நகர செயலாளர்கள், , பிற அணி மாவட்ட செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த வரவேற்பில் கலந்து கொண்டனர்,
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் கட்சி நிர்வாகிகள், தொடர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
மாலை 4 மணி அளவில் கோவில்பட்டியில் இருந்து அருப்புக்கோட்டை நிகழ்ச்சியில் பங்கேற்க் புறப்பட்டு செல்கிறார்.
