சென்னையில் நடந்த அகில இந்திய பரதநாட்டிய போட்டி


பாரம்பரிய கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் ஜகதாலயா அமைப்பு சார்பில் சென்னையில் `பலோத்சவ் 2024’ நடத்தப்பட்டது. 7முதல் 10 வயதுள்ள குழந்தைகளுக்கான குரல் மற்றும் பரதநாட்டிய போட்டி நடத்தப்பட்டது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இயல் இசை நாடக மன்றத்தில் நடந்த போட்டியில் . 170க்கும் மேற்பட்டவர்கள் தனி குரல், தனி நடனம் மற்றும் குழு நடனம் ஆகியவற்றில் பங்கேற்றனர்.
ஜகதோ உத்சவ் 2024 (11 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பங்கேற்பாளர்களுக்கான அகில இந்திய பரதநாட்டிய போட்டி) சென்னை, டி நகர், சர் பிடி தியாகராய மண்டபத்தில் நடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தனி மற்றும் குழு என 2 பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்பட்டது, சோலோவில் ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகள் இருந்தன. போட்டிக்கு பரதநாட்டியத் துறையில் புகழ்பெற்ற 12 நடுவர்கள் இருந்தனர். தொடர்ந்து இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
புகழ்பெற்ற நடனக் கலைஞர் டாக்டர். பத்மா சுப்ரமணியன், மக்களவை எம்.பி., டாக்டர் தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகை ராதிகா சரத்குமார், பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர் ஸ்ரீகலா பரதா (தேஜாஸ் ஸ்கூல் ஆப் பெர்பார்மிங் ஆர்ட்ஸ்), தி.நகர் தொகுதி எம்.பி., .கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவின் போது சுமார் 150 வெற்றியாளர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.முதல் பரிசு பெற்ற 16 பேருக்கு 2 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு பெற்ற 25 பேருக்கு 3000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டதுமூன்றாம் பரிசு பெற்ற 25 பேருக்கு நர்த்தகி நடன ஆடைகள் மூலம் 1000/- மதிப்புள்ள வவுச்சர் வழங்கப்பட்டது.
35 பங்கேற்பாளர்கள் சிறப்புப் பிரிவில் பரிசுகளை வென்றனர் மற்றும் சாம்பவி பொட்டிக்கிலிருந்து வவுச்சர்களைப் பெற்றனர். ஒட்டுமொத்த கோப்பையை டாக்டர் மஞ்சரி சந்திரா பெற்றுக்கொண்டார்.
